welcome message

Hearty Welcomes You

Always visit my site. If you want any news sms ON oommurugan to 9003798003

Flash News

Flash News:

popup.

Saturday, 31 March 2012

ஆசிரியர் தேர்வு முறையில் கொள்கை முடிவு மாற்றம் - அரசு அதிரடி உத்தரவு.


இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் தேர்வு முறையில், கொள்கை முடிவை மாற்றம் செய்து, புதிய அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
"ஒரே ஒரு தேர்வு தான்: தகுதித் தேர்வு மூலமே, ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவர்' என, பள்ளிக் கல்வி அமைச்சர் சிவபதி, நேற்று சட்டசபையில் அறிவித்தார். ஆசிரியர் தேர்வு முறை கொள்கையில், தமிழக அரசு திடீரென மாற்றம் செய்துள்ளது, தேர்வு எழுத உள்ளவர்களை, மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளது.


இதற்கு முன் வரை, இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் அனைவருமே, ஆசிரியர் தகுதித் தேர்வை எழுத வேண்டும். இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு, ஆசிரியர் தேர்வு வாரியம், மற்றொரு போட்டித் தேர்வை நடத்தி, அதன் மூலம் ஆசிரியர்களை தேர்வு செய்யும் என, பள்ளிக்கல்வி அமைச்சராக இருந்த சி.வி.சண்முகம் கூறியிருந்தார்.
கொள்கை மாற்றம் குறித்து, கடந்த 28ம் தேதியிட்ட அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது:

*கடந்த ஆண்டு நவ., 15ம் தேதியிட்ட அரசாணை குறித்து, தெளிவுரை வழங்கும் வகையில், இந்த அரசாணை வெளியிடப்படுகிறது.

*இதன்படி, இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் தேர்வு முறை கொள்கையை, தமிழக அரசு மாற்றியுள்ளது. இவர்களுக்கான போட்டித் தேர்வு, ஆசிரியர் தகுதித் தேர்வு என்ற பெயரில் நடக்கும்.
*பட்டதாரி ஆசிரியர்களைப் பொறுத்தவரை, ஆசிரியர் தகுதித் தேர்வில் பெறும் மதிப்பெண்கள், இன சுழற்சி முறை மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் நியமனம் இருக்கும்.
*இடைநிலை ஆசிரியர்களைப் பொறுத்தவரை, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருப்பதால், மாநில அளவிலான வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையிலேயே, தேர்வு செய்யப்படுவர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து, பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் வட்டாரம் கூறும் போது, "ஆசிரியர் தகுதித் தேர்வு என்ற, போட்டித் தேர்வு மூலம் தான், ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவர் என, கடந்த நவம்பர் 15ம் தேதியிட்ட அரசாணையிலேயே கூறப்பட்டுள்ளது. இது ஒன்றும் புதிய அறிவிப்பு இல்லை,'' எனத் தெரிவித்தனர். இருப்பினும் இது செயல்பாட்டிற்கு வரவில்லை.
இரு தேர்வுகளை நடத்துவது கடினமாக இருக்கும் என்றும்; ஆசிரியர் தகுதித் தேர்வையே, முக்கிய தேர்வாகக் கருதி, ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும் என்றும்; பல தரப்பினரும் வலியுறுத்தி வந்துள்ளனர். அது மட்டுமல்லாமல், ஏற்கனவே வெளியிடப்பட்ட அரசாணையில், தெளிவான விளக்கம் கேட்டு, ஆசிரியர் தேர்வு வாரியம், தமிழக அரசுக்கு கடிதம் எழுதியதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 25ம் தேதி, திருச்சியில் சில ஆசிரியர் சங்க பிரதிநிதிகளும், ஆசிரியர்களும், அமைச்சர் சிவபதியை சந்தித்து, இரு வகையான தேர்வு முறைகள் குறித்து கேட்டுள்ளனர். அதற்கு, "விரைவில் நல்ல அறிவிப்பு வரும்,'' எனத் தெரிவித்துள்ளார். இதையடுத்து தான், சட்டசபையில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அரசாணை குறித்து, கல்வித் துறை வட்டாரங்கள் கூறியதாவது: இடைநிலை ஆசிரியர்களைப் பொறுத்தவரை, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தாலே போதும். பதிவு மூப்பு அடிப்படையில் அவர்கள் தேர்வு செய்யப்படுவர். பட்டதாரி ஆசிரியர்களைப் பொறுத்தவரை டி.இ.டி., தேர்வில், 60 சதவீத மதிப்பெண்கள் வாங்கினாலேயே அவர்களுக்கு வேலை உறுதி எனக் கூற முடியாது. இவர்களில், அதிகபட்ச மதிப்பெண்கள் பெறுபவர்கள் மட்டுமே, இன சுழற்சி அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். இவ்வாறு வட்டாரங்கள் தெரிவித்தன.
கால அவகாசம் நீட்டிப்பு: கடந்த 22ம் தேதியில் இருந்து, மாநிலம் முழுவதும் டி.இ.டி., தேர்வுக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதுவரை 11 லட்சம் விண்ணப்பங்கள் விற்பனை ஆகியுள்ளதாகக் கூறப்படுகிறது. ஏப்., 4ம் தேதியுடன், விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி முடிகிறது.
ஆசிரியர் தேர்வுக்கு, டி.இ.டி., தேர்வையே பிரதான தேர்வாக தமிழக அரசு அறிவித்திருப்பதால், இதுவரை விண்ணப்பம் செய்யாதவர்கள் கூட இனி விண்ணப்பிப்பர். எனவே, அனைவரும் விண்ணப்பம் செய்ய போதுமான கால அவகாசம் வழங்க டி.ஆர்.பி., தீர்மானித்துள்ளது. அதன்படி, விண்ணப்பம் செய்வதற்கான கடைசி நாள் ஏப்., 10 அல்லது 12ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த அறிவிப்பு, வரும் 2ம் தேதிக்குள் வெளியாகும்.

Friday, 30 March 2012

மின் கட்டண உயர்வு அறிவிப்பு


   மின்கட்டண உயர்வை மின்சார ஒழுங்கு முறை ஆணையம் இன்று மாலை அறிவித்துள்ளது. ஒட்டுமொத்தமாக 37% மின் கட்டணம் உயர்த்தப்பட்டதாக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. இந்த மின் கட்டண உயர்வு ஏப்ரல் 1ந் தேதி அமல் படுத்தப்படும் என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. 9 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மின் கட்டண உயர்வு அமல் படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய மின் கட்டண உயர்வால் ரூ.7,874 கோடி வருமானம் கிடைக்கும் தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

புதிய கட்டண உயர்வு விவரம் :

*100 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு 1 யூனிட்டுக்கு ரூ. 1.10 கட்டண உயர்வு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

*100 யூனிட்டுக்கு கீழ் பயன்படுத்துவோருக்க 1 யூனிட்டுக்கு ரூ.25 காசு உயர்த்தப்பட்டுள்ளது.

*தொழிற்சாலைகளுக்கு 1 யூனிட்டுக்கு ரூ.4-லிருந்து. ரூ.5.50 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

*100-200 யூனிட் ஒன்றிற்கு ரூ.1.80 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

*வேளாண் சார்ந்த பணிகளுக்கு தனித்தனியே மின் கட்டணம்.

*200 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துவோருக்கு அரசு மானியம் கிடையாது.

*200 யூனிட் முதல் 500 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு ரூ. 3.50 மின் கட்டணம் வசூல் செய்யப்படும்.

*500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துவோருக்கு 1 யூனிட்டுக்கு ரூ.5.75 மின் கட்டணம் வசூல் செய்யப்படும்.

*மாதாந்திர குறைந்தபட்ச மின் கட்டணம் அனைவருக்கும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

உதாரணமாக,

*150 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தினால் ரூ.220 ஆக மின் கட்டணம் இருக்கும்.

*200 யூனிட்டுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தினால் ரூ.620 ஆக மின் கட்டணம் இருக்கும்.

*300 யூனிட்டுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தினால் ரூ.980 ஆக மின் கட்டணம் இருக்கும்.

*500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தினால் ரூ.1,680 ஆக மின் கட்டணம் இருக்கும்.

சமூக பொருளாதார மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பு - 2011 (நகர்புரம்) - மதிப்பூதியம் விவரம்.


மதிப்பூதியம் விவரம் - மேற்பார்வையாளர்கள் (SUPERVISORS)
பயிற்சியின் பயணப்படியாக ஒவ்வொரு நாளுக்கும் ரூ.150/- வீதம் வழங்கப்படும்.
(இத்தொகை காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களுக்கும் உண்டு).  
அனைத்து பொருட்கள் திரும்ப ஒப்படைத்தும், கணக்கெடுப்பு பிளாக்குகளிலும்  ஆய்வு மேற்கொள்ளப்பட்டதை 100 சதவீதம் உறுதி செய்த பிறகு ரூ.3000/- ஊக்கத்தொகையாக வழங்கப்படும். (காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர், களப்பணி ஆய்வு மேற்கொள்ளப்படவில்லை எனில் இத்தொகை கிடையாது). 
களப்பணி பயணப்படியாக ஒவ்வொரு நாளுக்கும் ரூ.150/- வீதம் அதிகபட்சமாக ஒரு கணக்கெடுப்பு பிளாக்கிற்கு 10 நாட்கள் வீதம் வழங்கப்படும்.  (காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர், களப்பணிக்கு செல்லவில்லை எனில் இத்தொகை கிடையாது).
 
 
மதிப்பூதியம் விவரம் - கணக்கெடுப்பாளர்கள் (ENUMERATORS)
பயிற்சியின் பயணப்படியாக ஒவ்வொரு நாளுக்கும் ரூ.150/- வீதம் வழங்கப்படும்.
(இத்தொகை காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களுக்கும் உண்டு).  
அனைத்து பொருட்கள் திரும்ப ஒப்படைத்தும், சுருக்கப் படிவத்தினை  மேற்பார்வையாளரிடம் சமர்பித்த பிறகு   ஒவ்வொரு கணக்கெடுப்பு பிளாக்குகிற்கும் பணி முடித்தமைக்கான மதிப்பூதியமாக தலா  ரூ.3000/-  வழங்கப்படும். (காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர், ஆனால் களப்பணி செல்லாத  கணக்கெடுப்பாளருக்கு   எனில் இத்தொகை கிடையாது). 
களப்பணி பயணப்படியாக ஒவ்வொரு நாளுக்கும் ரூ.150/- வீதம் அதிகபட்சமாக ஒரு கணக்கெடுப்பு பிளாக்கிற்கு 10 நாட்கள் வீதம் வழங்கப்படும்.  (காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர், களப்பணிக்கு செல்லவில்லை எனில் இத்தொகை கிடையாது).

Wednesday, 28 March 2012

Wednesday, 21 March 2012

TAMIL NADU TEACHER ELIGIBLITY TEST (TNTET) - 2012




TAMIL NADU TEACHER ELIGIBLITY TEST (TNTET) - 2012
TEACHER ELIGIBLITY TEST MODEL QUESTION



TAMIL NADU TEACHER ELIGIBLITY TEST (TNTET) - 2012

TEACHER ELIGIBLITY TEST SYLLABUS PAPER - I

                                   
TET Paper I                                                                 
TAMIL TET PAPER-I                                                  
ENGLISH TET PAPER-I                                             
MATHS TET PAPER-I                          
Environmental Studies and Science-Paper I                     
 


TEACHER ELIGIBLITY TEST SYLLABUS PAPER - II

                          
TET Paper II                                                                 
TAMIL TET PAPER-II                                                  
ENGLISH TET PAPER-II                                             
MATHS AND SCIENCE TET PAPER-II                          
Social Science-Paper II                     

Tuesday, 20 March 2012

Sunday, 18 March 2012

புதிதாக அறிமுகப்படுத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் கேள்விகள் எப்படி இருக்கும்?


               இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணிகளுக்கு இந்த ஆண்டு முதல்முறையாக ஆசிரியர் தகுதித்தேர்வு அறிமுகப்படுத்தப்பட உள்ளது. 
                        இதற்கான பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் ஓரிரு நாளில் வெளியிடப்படுகிறது.  தமிழ்நாட்டில் இதுவரை அரசு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், சிறப்பு ஆசிரியர்கள் என அனைத்து வகையான ஆசிரியர்களும் மாநில அளவிலான பதிவுமூப்பு(சீனியாரிட்டி) அடிப்படையில் நியமிக்கப்பட்டு வந்தனர்.
                        தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் தையல், ஓவியம், இசை, உள்ளிட்ட சிறப்பு ஆசிரியர்களை முன்பு இருந்து வந்ததைப் போன்று பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை  போட்டித்தேர்வு மூலம் தேர்வு செய்ய அரசு திட்டமிட்டு இருந்தது.  இதற்கிடையே இந்தியாவில் இலவச கட்டாய கல்வி சட்டம் கடந்த 1.4.2010 முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில், இடைநிலை ஆசிரியர்களுக்கும், பட்டதாரி ஆசிரியர்களுக்கும்  தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.  ஏற்கனவே திட்டமிட்டபடி முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் போட்டித்தேர்வு மூலம் நியமிக்கப்பட உள்ளனர்.   இடைநிலை ஆசிரியர்கள் தொடர்பாக வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருப்பதால் முதல்கட்டமாக  பட்டதாரி ஆசிரியர் பணிக்கும் மட்டும் தகுதித்தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.  தகுதித்தேர்வு நடத்தும் பொறுப்பு ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது.
                     தகுதித்தேர்வுக்கான பாடத்திட்டம் தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில்(என்.சி.டி.இ.) வரையறை செய்துள்ள வழிகாட்டி நெறிமுறைகளின் படி தயாரிக்கப்பட்டு உள்ளது.  மொழி ஆசிரியர்(தமிழ், ஆங்கிலம்), கணிதம் மற்றும் அறிவியல் ஆசிரியர், வரலாறு, புவியியல் உள்ளிட்ட சமூகவியல் ஆசிரியர் என்று 3 வகையாக தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.  தற்போது முதல்முறையாக தகுதித்தேர்வு நடத்தப்பட  உள்ளதால் அனைத்து மாணவர்களும் தெரிந்து கொள்ளும் வண்ணம் மாதிரி வினாத்தாள்களுடன் கூடிய பாடத்திட்டம் இன்னும் ஓரிரு நாளில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.  இதன்மூலம், எந்த முறையில் கேள்விகள் கேட்கப்படும் என்பதையும், என்னென்ன பாடங்களை படிக்கவேண்டும் என்பதையும் தேர்வு எழுத காத்திருக்கும் பி.எட். பட்டதாரிகள் அறிந்து கொள்ளலாம். 
                     ஆசிரியர் தகுதிதேர்வில் மொத்தம் 150 வினாக்கள் கேட்கப்படும்.  ஒரு வினாவுக்கு ஒரு மதிப்பெண் வீதம் மொத்த மார்க் 150.  இந்த தேர்வில் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண் அதாவது 150-க்கு 90 மதிப்பெண்கள் எடுத்தால் தேர்ச்சி பெற்றவராக அறிவிக்கப்படுவார்கள்.  ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் எழுதிக்கொள்ளலாம்.  மதிப்பெண் தகுதியையும் கூட்டிக் கொள்ளலாம்.  தகுதித்தேர்வில் தேர்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.  அந்த சான்று 5 ஆண்டுகள் செல்லத்தக்கது.  தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே பட்டதாரி ஆசிரியர் பதவிக்காக ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் போட்டித்தேர்வில் பங்கேற்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
                  தற்போது எஸ்.சி., எஸ்.டி., பி.சி., எம்.பி.சி. உள்பட அனைத்து இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கும் ஒரே தகுதி மதிப்பெண்தான் (60 சதவீதம்) நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.  ஒரு வேளை இடஒதுக்கீட்டு பிரிவினரில் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் பெற்றவர்கள் தேவையான அளவு தேர்ச்சி பெறவில்லை என்றால் அவர்களுக்கு மட்டும் மதிப்பெண் தகுதியை சற்று குறைப்பதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது.

Saturday, 17 March 2012

பட்ஜெட் 2012-13 முக்கிய அம்சங்கள்

 இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவையில் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி இன்று தாக்கல் செய்த பொது பட்ஜெட் 2012-13 முக்கிய அம்சங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

தனிநபர் வருமான வரி உச்ச வரம்பு ரூ.2 லட்சமாக நிர்ணயம்
கார்ப்பரேட் வருமான வரி உச்சவரம்பில் மாற்றமில்லை
2 லட்சம் வரை ஆண்டு வருமானம் பெற்றால் வரி இல்லை
ரூ2 லட்சம் முதல் 5 லட்சம் வரை வருமானம் பெறுவோருக்கு 10% வரி.
ரூ.5 லட்சம் முதல் 10 லட்சம் வரை வருமானம் பெறுவோருக்கு 20% வரி.
ரூ.10 லட்சத்திற்கு மேல் வருமானம் பெறுவோருக்கு 30% வரி.


நிதிநிலை அறிக்கையின் முக்கிய அம்சங்களாவன :
ஊரகப் பகுதி வீட்டு வசதி திட்டம் மேம்படுத்தப்படும்
கட்டமைப்புத் திட்ட பணிகளுக்கு ரூ.50,00,000 லட்சம் கோடி முதலீடு
நேரடி மற்றும் மறைமுக வரிகள் சீரமைக்கப்படும்.
***
சுத்திகரிக்ப்பட்ட தங்கத்தின் சுங்கவரி இரட்டிப்பு.
வைரம், எமரால்ட், ரூபி விலைகள் உயர்த்தப்பட்டுள்ளது
தங்கம் மற்றும் பிளாட்டினத்திற்கான சுங்க வரி 2% ல் இருந்து 4% ஆக உயர்வு
பிராண்டட் வெள்ளி நகைகளுக்கு முழு சுங்க வரி விலக்கு
***
இறக்குமதி செய்யும் கார்களுக்கான சுங்க வரி 75% உயர்வு
தங்க கட்டி மற்றும் நாணயங்கள் இறக்குமதிக்கு சுங்க வரி 4% உயர்வு
எல்.சி.டி. எல்.இ.டி. ஆகியவற்றிற்கு சுங்க வரி விலக்கு
இறக்குமதி செய்யும் விமான உதிரி பாகங்களுக்கு சுங்க வரி விலக்கு
***
பாதுகாப்புத் துறைக்கு ஒதுக்கும் நிதி ரூ.1,93,007 கோடியாக உயர்வு
செல்பேசி பாகங்களுக்கு அடிப்படை சுங்கத் தீர்வையில் இருந்து விலக்கு
ஆட்டோமேட்டட் ஷட்டல் லூம்ஸ்களுக்கும் சுங்கத் தீர்வையில் இருந்து விலக்கு
ரயில்வே கருவிகளுக்கான சுங்கத் தீர்வை 10%ல் இருந்து 7.5% ஆக குறைப்பு
தங்கம் மற்றும் பிளாட்டினம் பொருட்களுக்கான சுங்கத் தீர்வை உயர்வை
***
சேவை வரி உயர்வு மூலம் ரூ.18,660 கோடி வருவாய் கிடைக்கும் என்று இலக்கு
சுங்கவரி தீர்வையில் மாற்றமில்லை
விலை உயர்ந்த கார்களுக்கான சுங்கத் தீர்வை 27% ஆக உயர்வு
சில முக்கிய கட்டமைப்புப் பணிகளுக்கு சேவை வரியில் இருந்து விலக்கு
எல்.என்.ஜி. சுங்கத் தீர்வையில் இருந்து விலக்கு
தெர்மல் மின் நிலையங்களுக்கு 2 ஆண்டுகளுக்கு சுங்க வரி விலக்கு
நிலக்கரிக்கு முழு சுங்க வரி விலக்கு
***
பள்ளிக் கல்விக்கு சேவை வரியில் இருந்து விலக்கு
ஆராய்ச்சி பணிகளுக்கு 200% வரி விலக்கு
17 சேவைகளைத் தவிர மற்ற அனைத்துத் துறைகளுக்கும் சேவை வரி விலக்கு
எக்ஸைஸ் டியூட்டி 10%ல் இருந்து 12% ஆக உயரும்
சேவை வரியும் 10%ல் இருந்து 12% ஆக உயர்வு
***
தனிநபர் வருமான வரி உச்ச வரம்பு ரூ.2 லட்சமாக நிர்ணயம்
கார்ப்பரேட் வருமான வரி உச்சவரம்பில் மாற்றமில்லை
2 லட்சம் வரை ஆண்டு வருமானம் பெற்றால் வரி இல்லை
ரூ2 லட்சம் முதல் 5 லட்சம் வரை வருமானம் பெறுவோருக்கு 10% வரி.
ரூ.5 லட்சம் முதல் 10 லட்சம் வரை வருமானம் பெறுவோருக்கு 20% வரி.
ரூ.10 லட்சத்திற்கு மேல் வருமானம் பெறுவோருக்கு 30% வரி.
***
2012-13ம் நிதியாண்டின் மொத்த செலவுத் தொகை ரூ.14.9 லட்சம் கோடி
வரும் நிதியாண்டில் மொத்த வரி வருவாய் 15% உயரும்.
பொதுமக்களின் தேவையை கருத்தில் கொண்டு உற்பத்தி அமையும்.
திட்டமிடப்படாத செலவுத் தொகை ரூ.9.7 லட்சம் கோடி
வரி வருவாய் ரூ.10.77 லட்சம் கோடி
இந்தியாவின் மொத்த வருவாயில் சராசரி வரித் தொகை 10.6%
அயல்நாட்டு அனல்மின் நிலையங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ள கோல் இந்தியா ஆலோசனை அளித்துள்ளது.
***
மானியத் தொகை சுமையைக் குறைக்க அரசு திட்டமிட்டுள்ளது.
அனைவருக்கும் கல்வி பெறும் உரிமைச் சட்டத்தினை செயல்படுத்த ரூ.25,555 கோடி ஒதுக்கீடு.
மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்படும் கடன்களுக்கு வட்டித் தொகை குறைப்பு.
சிறு மற்றும் குறு நிதி நிறுவனங்கள் அறிமுகப்படுத்தப்படும்.
பாதுகாப்புப் பணிகளுக்கு ரூ.1.95 லட்சம் கோடி ஒதுக்கீடு
***
ஊரகப் பகுதி மேம்பாட்டிற்காக ரூ, 20,000 கோடி ஒதுக்கீடு
என்ஆர்எச்எம். திட்டத்திற்கு ஒதுக்கப்படும் தொகை ரூ.20,820 கோடியாக உயர்வு
இந்தியாவின் வளர்ச்சி திருப்தியளிக்கவில்லை. ஆனால் தற்போது சற்று உயர்ந்து வருகிறது.
வரும் நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 7.6% ஆக இருக்கும்.
***
கட்டமைப்புப் பணிகளுக்கான வரியற்ற நிதியாக ரூ.60,000 ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் கார்ப்பரேட் கடன் சந்தையில் தகுதி வாய்ந்த வெளிநாட்டு முதலீடுகள் வரவேற்கப்படும்.
சம அதிகாரம் கொண்ட சேமிப்பு திட்டங்கள் அறிமுகம்.
ஊரகப் பகுதிகளில் குடிநீர் மற்றும் சுகாதாரப் பணிகளுக்காக ரூ.14,000 கோடி ஒதுக்கீடு.
சொத்துக்ள் விற்பனை மூலம் ரூ.30,000 கோடி வருமானம் ஈட்ட இலக்கு
***
வரும் நிதியாண்டில் 8,800 கி.மீ. தூரத்திற்கு தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்படும்.
வேளாண் துறைக்கு ரூ.20,208 கோடி முதலீடு செய்யப்படும்.
விவசாயமும், அணைகளும் சிறப்பு நிதி பெற தகுதிவாய்ந்தவையாக உள்ளன.
மாநில அளவிலான விவசாய உற்பத்தி நிறுவனங்கள் அமைக்கப்படும்.
உணவு பாதுகாப்புக் கொள்ளை உருவாக்கப்படும்.
நபார்ட் வங்கிக்கு 10,000 கோடி ஒதுக்கப்படுகிறது.
குறைந்த கால பயிர்க் கடன்களுக்கான வட்டிகள் குறைக்கப்படும்.
வரும் நிதியாண்டில் வேளாண் கடன்களுக்கு 5.75 லட்சம் கோடி ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
***
12வது திட்டத்தில் கட்டமைப்புப் பணிகளுக்காக ரூ.50 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும்.
இரட்டை கட்டமைப்பு கடன் தொகை ரூ.60,000 கோடி
டி.டீ.சி. முறை விரைவில் அமல்படுத்தப்படும்.
வரும் 5 ஆண்டுகளுக்குள், இந்தியாவிற்குத் தேவையான யூரியாவை இந்தியாவே உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
***
ராஜீவ்காந்தி இக்விடி திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
இந்தியாவின் கட்டமைப்புத் துறைகளில் உள்ள பல்வேறு சிக்கல்கள் தீர்க்கப்படும்.
தற்போதுள்ள பணவீக்கமும், பற்றாக்குறையும் வரும் நிதியாண்டில் களையப்படும்.
ஊழலையும், கறுப்புப் பணத்தையும் ஒழிக்கும் வகையில் அரசு நடவடிக்கைகள், முடிவுகள் அனைத்தும் வெளிப்படையாகவும், சிறப்பாகவும் நடத்தப்படும்.
***
வரும் நிதியாண்டில் ரூ.30,000 கோடி முதலீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
ஜி.எஸ்.டி. முறை ஆகஸ்ட் மாதத்தில் இருந்து செயல்படுத்தப்படும்
நேரடி வரி விதிப்பு முறை விரைவில் அமல்படுத்தப்படும்.
மானியத் தொகைகள் திருத்தியமைக்கப்படும்.
தனியாரின் முதலீடு ஊக்குவிக்கப்படும்.
வேளாண்மை, எரிசக்தி, போக்குவரத்து, நிலக்கரி, சக்தி, தேசிய நெடுஞ்சாலைத் துறைகளில் உள்ள தடைகள் நீக்கப்படும்.
***
உற்பத்தி துறை மீண்டெழுந்து முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டுள்ளது.
கருப்புப் பணமும், ஊழலும் அதிகரித்துள்ளன
இதன் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி குறைந்து கொண்டே போகிறது.
எண்ணெய் விலை உயர்வு, வளர்ச்சியை மிகவும் பாதித்துள்ளது.
ஏற்றுமதி-இறக்குமதி சந்தையில் இந்தியா இலக்கினை எட்டியுள்ளது.
கடந்த ஆண்டு பல்வேறு சவால்களை சந்தித்து அதில் இருந்து மீண்டெழுந்து வந்துள்ளோம்.
நாட்டின் மொத்த வருவாய் உயர்வு 6.9% அளவிற்கு எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் நாட்டின் வளர்ச்சியும் குறிப்பிடத்தக்க அளவில் உயரவில்லை.
மத்திய கிழக்குப் பகுதிகளில் ஏற்பட்ட பொருளாதார நிலைமை கவலை கொள்ள வைத்தன.
சர்வதேச பொருளாதார நெருக்கடி இந்தியாவையும் பாதித்தது.
பொருளாதாரத்தில் சேவை வழங்கல் பிரிவில் மேம்பாடு தேவைப்படுகிறது.
கடந்த நிதியாண்டில் மேம்பாட்டுப் பணிகள் பாதிக்கப்பட்டன.

ஆசிரியர் தகுதித் தேர்வு: பி.லிட். படித்தவர்கள் எந்தத் தாளை எழுதலாம்? தேர்வு வாரியம் விளக்கம்.


         ஆசிரியர் தகுதித் தேர்வில் பி.லிட். தமிழ்ப் பட்டதாரிகள் எந்தத் தாளை எழுதுவது என்பது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் விளக்கம் அளித்துள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வு வரும் ஜூன் 3-ம் தேதி நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. அன்றைய தினம் காலை முதல் தாளும், பிற்பகல் இரண்டாம் தாளும் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை கற்பிக்க விரும்புபவர்கள் முதல் தாள் தேர்வையும், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை கற்பிக்க விரும்புபவர்கள் இரண்டாம் தாள் தேர்வையும் எழுதலாம்.
பி.லிட். மற்றும் பி.எட். படித்தவர்கள் இரண்டாம் தாளை எழுதலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பி.லிட். படிப்போடு டிப்ளமோ படித்தவர்கள், புலவர் பயிற்சி முடித்தவர்கள் எந்தத் தாளை எழுத வேண்டும் என்பது தொடர்பாக பலர் விளக்கம் கேட்டு வருகின்றனர்.
இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் கூறியதாவது:
பிளஸ் 2 படிப்புக்குப் பிறகு ஆசிரியர் டிப்ளமோ பட்டத்தையும், அதன் பிறகு பி.லிட். பட்டமும் பெற்றவர்கள் முதல் தாளையும், இரண்டாம் தாளையும் எழுதலாம்.
பிளஸ் 2 படிப்புக்குப் பிறகு பி.லிட். பட்டமும், புலவர் பயிற்சியும் முடித்தவர்கள் இரண்டாம் தாளை எழுதலாம்.
இணையதளத்தில் வெளியீடு: ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பாக எழும் சந்தேகங்களைத் தீர்க்கும் வகையில் எளிய வினா, விடை அமைப்பிலான தகவல்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் விரைவில் வெளியிடப்பட உள்ளன.
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் இவை வெளியிடப்பட உள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. 

தொடக்கக்கல்வி சார்நிலைப் பணி - RTE 2009ன் படி பட்டதாரி ஆசிரியர் பணியிடம் இல்லாத / பட்டதாரி ஆசிரியர் கூடுதலாக தேவைப்படும் பள்ளிகளுக்கு பணியிடம் அனுமதித்த ஆணையினை அனுப்புதல்.


  • தொடக்கக்க்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 1848 / டி1 /2010, நாள்.12.01.2012
  • இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009ன்(அரசாணை (நிலை) எண்.193 பள்ளிகல்வி (வ.செ.2 ) நாள். 2.12.2012) படி பட்டதாரி ஆசிரியர் பணியிடம் இல்லாத / பட்டதாரி ஆசிரியர் கூடுதலாக தேவைப்படும் பள்ளிகளுக்கு பணியிடம் அனுமதித்து ஆணை வழங்கப்படுகிறது.
  • பணியிடங்கள் அனுமதித்த ஆணையினை சார்ந்த உதவி தொடக்கக் கல்வி அலுவலக / பள்ளிகளின் அளவைப் பதிவேட்டில் பதிவு செய்துக்கொள்ள தெரிவிக்குமாறு சார்ந்த மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
  • ஆய்வு அலுவலர்கள் பள்ளிகளை பார்வையிடும் போது அளவைப் பதிவேட்டில் உரிய பதிவுகள் செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்யுமாறும் அறிவுறுத்தப்படுகிறது.
  •  அரசாணை (நிலை) எண்.193 பள்ளிகல்வி (வ.செ.2 ) நாள். 2.12.2011 பதிவிறக்கம் செய்ய...

Tuesday, 13 March 2012

10 month language course to Govt/ aided school Teachers at Mysore CIIL


மைசூரில் உள்ள மத்திய இந்திய மொழிகள் நிறுவனம் ( Central  Institute  of indian  Languages ) அரசு மற்றும் நிதியுதவி பேறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பத்து மாதம் விருப்பமுள்ள மொழிப் பாடம்  கற்பிக்கப் படுகிறது. வழக்கமான  சம்பளத்தோடு ரூபாய் 800  வழங்கப்படுகிறது . இதில் உயர்நிலைப் பள்ளிகளில் ( 6  முதல் 10 வகுப்பு)  பணியாற்றும் 3  வருட பணி அனுபவம் உள்ள ஆசிரியர்களுக்கு 80% , முதுகலை பட்டதாரிகளுக்கு  10 %  ஒதுக்கப்படுகிறது. அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் பணியாற்றுபவர்களுக்கு ரூ. 5000 + 800  வழங்கப்படுகிறது .
 
 
 

National Talent Search Examination Result

Wednesday, 7 March 2012

முதல் ஆசிரியர் தகுதித்தேர்வு ஜுன் 3ல் நடக்கிறது



Teachers Recruitment Board
 College Road, Chennai-600006
Advertisement No .04/2012                                                                                   Date 07/03/2012 


Applications are invited for writing Teacher Eligibility Test (TET)
1. Date of Notification :  07.03.2012
2. Commencement of sale of application :  22.03.2012
3. Last date for receipt of application : 04.04.2012
4. Date of written exam paper - 1 - Subject code: 12TET 01: 03.06.2012 FN  for STD 1 to 5
5. Date of written exam paper - 2 - Subject code: 12TET 02 : 03.06.2012 AN for STD 6 to 8
category:
 Secondary grade and Graduate Teacher ( BT Assistants) from Govt/ Govt Aided/ Private appoint on or after 23.08.2010. They should complete TET within 5 years of period
Application Fee : Rs.50
Exam Fee : Rs. 500/- & 250 for sc/st/ differently abled
Application will be available at concern district DEO offices & Exam will be conducted at 66 Educational District Head Quarters .

Paper 1 = Total 150 marks 

Child development and pedagogy ( 6 to 11 age group) : 30 marks
Language 1 : 30 marks
Language 2 : 30 marks
Maths : 30 marks
Environmental studies : 30 marks

Paper 2 = Total 150 marks 

Child development and pedagogy ( 11 to 14 age group) : 30 marks
Language 1 : 30 marks
Language 2 : 30 marks
option:
a. maths and science : 60 marks
or
b. social science
or
c. any other teacher (a) or (b )

( All questions are multiple choice based) 
Valid only 7 years... 


ட்டாயக் கல்வி சட்டத்தின்படி, தமிழகத்தில், முதல் ஆசிரியர் தகுதித் தேர்வு, ஜூன் 3ம் தேதி நடக்கிறது. இதற்கான விண்ணப்பங்கள், 22ம் தேதி முதல் வழங்கப்பட உள்ளன.
* கடந்த 2010, ஆக., 23ம் தேதிக்குப் பின், அரசு, அரசு நிதியுதவி, தனியார் என எந்தப் பள்ளிகளில் பணியில் சேர்ந்தவரானாலும், ஆசிரியர் தகுதித் தேர்வை கண்டிப்பாக எழுதி, தேர்ச்சி பெற வேண்டும்.
* ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரை, ஆசிரியர் வேலைக்கு வர வேண்டும் என விரும்புபவர்களில், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் என, இரு வகையினரும் இத்தேர்வை எழுத வேண்டும்.
* இடைநிலை ஆசிரியர் பணிக்கு வருபவர்கள், முதல் தாள் தேர்வையும்; பட்டதாரி ஆசிரியர் பணியில் இருப்பவர்கள் மற்றும் இந்தப் பணிக்கு வர விரும்புபவர்கள், இரண்டாம் தாள் தேர்வையும் எழுத வேண்டும்.
* இடைநிலை மற்றும் பட்டதாரி என, இரு வகுப்புகளை எடுக்கும் ஆசிரியர்கள் மற்றும் இரு வகுப்புகளுக்கும் சேர்த்து பணி செய்ய விரும்புபவர்கள், இரு தேர்வுகளையும் எழுத வேண்டும்.
* கேள்விகள், தமிழ் மற்றும் ஆங்கில வழியில், Objective முறையில் இருக்கும். தலா, 150 மதிப்பெண்களுக்கான தேர்வில், தேர்ச்சி பெற, 60 சதவீத மதிப்பெண்கள் (90) பெற வேண்டும்.
* விண்ணப்பம் விலை, 50 ரூபாய்; தேர்வுக் கட்டணம், 500 ரூபாய். இரு தாள் தேர்வுகளை சேர்த்து எழுதவும், 500 ரூபாய் கட்டணமே போதுமானது.
* ஏப்., 4ம் தேதி வரை, விண்ணப்பங்கள் வழங்கப்படும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலகங்களிலேயே சமர்ப்பிக்க வேண்டும். ஜூன் 3ம் தேதி, தகுதித் தேர்வு நடைபெறும்.
* ஆறு லட்சம் பேர் தேர்வு எழுதுவர் என, ஆசிரியர் தேர்வு வாரியம் எதிர்பார்க்கிறது. எனினும், ஏழு லட்சம் விண்ணப்பங்கள் அச்சிடப்படும் என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Tuesday, 6 March 2012

TNPSC - Departmental Examinations May 2012 - Instructions

DEPARTMENTAL EXAMINATIONS - MAY 2012 NOTIFICATIONS 
   
  •  
  •  
 
 

தொடக்கக்கல்வி - அனைத்து வகை பள்ளிகளில் பயிலும் மாணவ / மாணவியர்கள் மதிய உணவு இடைவெளியின் போது கண்காணித்தல் - இயக்குனர் அறிவுரை.

*தொடக்ககல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 4539 / J3 / 2012, நாள். 24.2.2012.
*காலை மற்றும் மதிய உணவு இடைவேளைகளில் மாணவ / மாணவியர்கள் பள்ளி வளாகத்தை விட்டு வெளியே செல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
*எக்காரணம் கொண்டும் மாணவ / மாணவியர்கள் பள்ளி வேலை நேரத்தில் பள்ளி வளாகத்தை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கக்கூடாது.
*பள்ளி இடைவேளை மற்றும் உணவு இடைவேளையின் நேரங்களில் தினந்தோறும் மாணவ / மாணவியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ஒரு ஆசிரியரை நியமனம் செய்து கண்காணிக்க வேண்டும்.
*பள்ளிவளாகத்தில் ஏதேனும் பாழடைந்த கட்டிடங்கள் மற்றும் கிணறுகள் இருந்தால் அதனை பற்றி ஊராட்சி ஒன்றிய ஆணையாளரிடம் தெரிவித்து அதனை மூடுவதற்கும் , அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் இருக்க இருப்பதற்கும் தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும் என  அனைத்து மாவட்ட தொடக்ககல்வி அலுவலர்களுக்கு தொடக்ககல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

Sunday, 4 March 2012

ஆங்கில வழிக் கல்வியில் சேரும் குழந்தைகள் எண்ணிக்கை அதிகரிப்பு


            நாட்டில், ஆங்கில வழியில் படிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை, முதன்முறையாக 2 கோடியைத் தாண்டியுள்ளது.
கடந்த 2003-04 ஆண்டு எண்ணிக்கையோடு ஒப்பிடுகையில், இந்த 2010-11 ஆண்டின் எண்ணிக்கையானது 274% அதிகம். இந்தியாவில், இந்தி வழிக் கல்விக்கு அடுத்து, ஆங்கில வழிக் கல்வியே அதிகக் குழந்தைகளால் கற்கப்படுகிறது. வங்காளம் மற்றும் மராத்திய மொழிகளை இது பின்னுக்கு தள்ளிவிட்டது. கல்வி, திட்டமிடுதல் மற்றும் நிர்வாகத்திற்கான தேசியப் பல்கலைக்கழகம்(National university of Education, planning and Administration - NUEPA) என்ற அமைப்பின், கல்விக்கான மாவட்ட தகவல் அமைப்பு(District information system for Education - DISE) மேற்கொண்ட, நாடு தழுவிய பள்ளி சேர்க்கை ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளது. அதேசமயம், இந்த ஆய்வறிக்கை இனிமேல்தான் வெளியிடப்படும்.

இந்தி, பெங்காலி, மராத்தி மற்றும் ஆங்கிலம் போன்ற மொழி வழிக் கல்வியில் நடைபெறும் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை 2010-11 ம் ஆண்டு கணக்கெடுப்பில் அதிகரித்திருந்தாலும், ஆங்கில வழிக் கல்வியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அனைத்தையும்விட அதிகரித்திருக்கிறது.
அதேசமயம், ஆங்கிலத்திற்கு இருக்கும் தேவை காரணமாக, மாநில அரசுகள், இந்த விஷயத்தை யாரும் கற்பனை செய்ய முடியாத விதத்தில், எதேச்சதிகாரமாக, கையாள்வதாக கல்வியாளர்களும், கொள்கை வகுப்பாளர்களும் நம்புகின்றனர்.
உலகின் சிறந்த ஆராய்ச்சிகள் சொல்வது என்னவென்றால், ஒரு குழந்தையின் சிந்தனைத் திறன் சிறப்பாக மேம்பட, தாய்மொழிக் கல்வியே சிறந்தது என்பதே. பெற்றோர்கள், தங்களுடைய பிள்ளைகள் ஆங்கிலம் கற்க வேண்டும் என்றுதான் விரும்புகிறார்களே தவிர, அவர்களை கட்டாயம் ஆங்கில வழிக் கல்வியில்தான் சேர்த்துவிட வேண்டும் என்று நினைப்பதில்லை. மாநில மொழிப் பள்ளிகள், ஆங்கில மொழியையும் சிறப்பாக கற்பித்தால், ஆங்கில வழிப் பள்ளிகளுக்கு தங்களது பிள்ளைகளை அனுப்ப வேண்டிய கட்டாயம் பெற்றோருக்கு இருக்காது என்று பல கல்வியாளர்கள் கூறுகின்றனர்.
ஒரு மொழி வழியில் ஒரு குழந்தை பல ஆண்டுகள் படித்தாலும், அம்மொழியை சிறப்பாக பேசவோ, எழுதவோ அந்தக் குழந்தை திறமைப் பெற்றுவிடுவதில்லை என்று ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன. ஒரு குழந்தை முதல் மொழியில்(Mother tongue or first language) சிறப்பு தேர்ச்சி பெற்றால், அது ஆங்கிலம் போன்ற இரண்டாவது மொழியை விரைவாக கற்றுக்கொள்ளும் என்றும் அந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பாடப்புத்தகங்கள் எந்த மொழியில் இருக்கிறது என்பது பெரிய முக்கியமல்ல என்பதே அவற்றின் கருத்து.
மேலும், நாட்டிலுள்ள ஏராளமான பள்ளிகள் தங்களை ஆங்கில மீடியம் பள்ளிகள் என்று அழைத்துக் கொண்டாலும், அவை சிறப்பான ஆங்கிலத்தைக் கற்றுக் கொடுப்பதில்லை. எனவே, தேசியளவில் ஒரு தெளிவான மற்றும் விரிவான மொழிக் கொள்கை தேவை. அப்போதுதான், மாநில அரசுகள் ஆங்கில வழிக் கல்வி தொடர்பாக மேற்கொள்ளும் தன்னிச்சையான முடிவுகளை தடுக்க முடியும் என்று சில கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், ஆங்கில வழிக் கல்வியானது தங்களது குழந்தையின் வாழ்வை மேம்படுத்தும் என்று நம்பும் பெற்றோர்களின் எண்ணிக்கை இந்தியளவில் அதிகரித்துள்ளதே இந்த உயர்வுக்கு காரணம் என்றும், அதேசமயம், தரமான கல்வி என்ற முக்கிய அம்சத்தைப் பற்றி அவர்கள் நினைப்பதில்லை என்றும் அந்தக் கல்வியாளர்கள் கூறுகின்றனர்.

Saturday, 3 March 2012

தொடக்கக் கல்வி - மார்ச் 8 - அனைத்து பள்ளிகளிலும் உலக மகளிர் தினம் கொண்டாடப்பட வேண்டும்.



Buttonதொடக்கக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 5156 / J3 / 2012, நாள். 03.02.2012.
Buttonஇன்று மகளிரின் நிலை எல்லாம் துறைகளிலும் உயர்ந்துள்ளது. இத்தனை சிறப்புமிக்க மகளிரை பெருமைப்படுத்தும் விதமாக மகளிர் தினம் உலக அளவில் மார்ச் 8ல் கொண்டாடப்பட உள்ளது.
Buttonஅனைத்து பள்ளிகளிலும் மகளிர் தினத்தை சிறப்பாக கொண்டாடும் வகையில் சாதனைப் படத்த பெண்களைப் பற்றியும், பெண்கள் முன்னேற்றம் பெண்கள் கல்வி சார்ந்து அரசு மேற்கொண்டு வரும் அரிய திட்டங்கள் பற்றியும்  மாணவர்களிடையே காலை வழிப்பாட்டுக் கூட்டத்தில் எடுத்து கூற வேண்டும்.
Buttonபேச்சுப் போட்டி, பாட்டுப் போட்டி, கட்டுரைப் போட்டி போன்ற போட்டிகள் நடத்தி தொடர் நிகழ்வாக, உலக மகளிர் தினத்தில் சிறப்பாக பங்கேற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகளை அளித்து பாராட்டுகளை தெரிவித்து மகளிர் தினத்தை சிறப்பாக கொண்டாட வேண்டும் என இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

Friday, 2 March 2012

ஓய்வூதியம் - ஓய்வூதியதாரர்கள் / குடும்ப ஓய்வூதியதாரர்கள் - குடும்ப ஓய்வூதியம் / கூடுதல் குடும்ப ஒய்வூதியம் வழங்குவதல் - தமிழக அரசு தெளிவுரை வழங்கியது.

  அரசு கடித எண். 44093 / ஓய்வூதியம் / 2011 - 1, நாள். 24.2.2012 
  ஓய்வூதிய முன்மொழிவினை அனுப்பிவைத்த அலுவலகத்திலிருந்து  உரிய காலகெடுவிற்குள் வயது உறுதி செய்யப்படாத நிகழ்வுகளில் தற்காலிகமாக வழங்கப்பட்ட ஓய்வூதியம் பிடித்தம் செய்ய தேவையில்லை.
PAN CARD, VOTER'S IDஐ வயது குறித்த ஆவணமாக எடுத்துக் கொள்ளலாம்.