welcome message

Hearty Welcomes You

Always visit my site. If you want any news sms ON oommurugan to 9003798003

Flash News

Flash News:

popup.

Thursday 23 August 2012

கடந்த ஆண்டு நடந்த குரூப்-4, குரூப்-8 தேர்வுகள் ரத்தாகுமா?: அதிகாரிகள் பரிசீலனை


கடந்த ஆண்டு நடந்த குரூப்-4, குரூப்-8 தேர்வுகள் ரத்தாகுமா?: அதிகாரிகள் பரிசீலனை


ஈரோடு, தர்மபுரி உள்ளிட்ட நகரங்களில் கடந்த 12-ந்தேதி குரூப்-2 தேர்வின் வினாத்தாள் தேர்வுக்கு முன்பே வெளியானது. இதையடுத்து அந்த தேர்வு ரத்து செய்யப்பட்டன. இந்த விவகாரத்தில் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஈரோட்டில் கையால் எழுதப்பட்ட குரூப்-2 வினாத்தாள்களின் பிரதிகளை பிரிண்ட் எடுக்க பயன்படுத்தப்பட்ட கம்ப்யூட்டர்களை அரசு அதிகாரிக்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

இணையதள மையத்தின் கம்ப்யூட்டரில் உள்ள ஒவ்வொரு பகுதியும் ஆய்வு செய்யப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட மின்னஞ்சலில் உள்ள பிரிவுகளை நீக்கும்போது அவை மொத்தமாக ஒரு இடத்தில் சேரமாகும். அந்த பகுதியை சோதித்து பார்த்ததில் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக டி.என்.பி.எஸ்.சி. நடத்திய தேர்வுகளின் வினாத்தாள்கள் கையால் எழுதப்பட்டு அவை பிறருக்கு அனுப்பப்பட்டு பின்னர் அனுப்பும் பகுதியில் (சென்ட் பாக்ஸ்) இருந்து நீக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

இந்த வினாத்தாள்கள் மற்றவர்களுக்கு அனுப்பப்பட்ட தேதி மற்றும் நேரம் என்பவை சம்பந்தப்பட்ட தேர்வுகளை டி.என்.பி.எஸ்.சி. தமிழகம் முழுவதும் நடத்திய தேதிகளுக்கு முன்பானவை என தெரியவந்துள்ளது.

இதன்மூலம் ஒவ்வொரு தேர்வுக்கு முன்பாகவே 5 வினாத்தாள்கள் வெளியாகி இருப்பது தெளிவாக தெரிகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த ஒரு வருடத்துக்குள்ளாக கிராம நிர்வாக அலுவலர் தேர்வு, குருப்-4 உள்ளிட்ட முக்கிய தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளன. அதில் முடிவுகள் வெளியிடப்படாமல் இருக்கும் குரூப்-4 மற்றும் குரூப்-8 ஆகிய தேர்வுகளையும் ரத்து செய்யலாமா? என்று டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள் ஆலோசித்து வருகிறார்கள்.

தேர்வாணைய உறுப்பினர்கள் ஒன்றுகூடி இதுதொடர்பான முடிவை எடுப்பார்கள் என கூறப்படுகிறது.

No comments: