welcome message

Hearty Welcomes You

Always visit my site. If you want any news sms ON oommurugan to 9003798003

Flash News

Flash News:

popup.

Wednesday 5 September 2012

ஆசிரியர் தின நல்வாழ்த்துகளை மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் கூறியுள்ளார்.



தமிழகத்தில் பிறந்து ஆசிரியராகப் பணி புரிந்து, தமது நற்சிந்தனையாலும்,நல்லொழுக்கத்தினாலும் மிக உயர்ந்து நாட்டின் உயரிய பதவியாகிய குடியரசுத் தலைவர் பதவியினை வகித்து, ஆசிரியப் பணிக்கு பெருமை தேடித் தந்த டாக்டர் எஸ். இராதாகிருஷ்ணன் அவர்களுடைய பிறந்த நாளை ஆசிரியர் தினமாகஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் திங்கள் 5-ஆம் நாள் அனைவரும் கொண்டாடி மகிழ்ச்சி அடைகிறோம்.கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றை யவைஎன்கிற வள்ளுவர் வாக்கின்படி ஒருவனுக்கு அழிவு இல்லாத சிறந்த செல்வம் கல்வியே ஆகும். நாட்டில் அறியாமையையும், வறுமையையும் ஒழிக்கக் கூடிய ஒரு கருவி உண்டு என்றால் அது தான் கல்வி. அந்தக் கல்விச் செல்வத்தை மாணவர்களுக்கு வழங்கும் பெருமையினைப் பெற்றவர்கள் ஆசிரியப் பெருமக்கள் என்றால் அது மிகையாகாது. பெற்றோர்களுக்கு அடுத்தபடியாக தம்மிடம் பயிலும் மாணவக் கண்மணிகளிடம் அன்பு காட்டி அரவணைத்து வழிகாட்டுவதன் மூலமே அவர்கள் சிறந்த கல்வியைப் பெற்று சமுதாய வளர்ச்சிக்கு உதவிட முடியும் என்பதை அறிந்த டாக்டர் எஸ். இராதாகிருஷ்ணன் அவர்கள் அதன்படி செயல்பட்டு,ஆசிரியர் தொழிலுக்கு மிகப் பெரிய பெருமையைத் தேடித் தந்தார். அப்பெருமகனார் காட்டிய வழியில் ஆசிரியப் பெருமக்கள் அனைவரும் நல்ல குறிக்கோள்களையும், சமுதாய உணர்வுகளையும் மாணவச்செல்வங்களுக்கு விதைத்து சிறந்த கல்விப் பணியாற்றிட வேண்டும் என்பதே எனது பேரவா. மாணவச் சமுதாயம் கல்வி, கேள்வியில் சிறந்து விளங்கி பார் போற்றிட வாழ உங்கள் அன்பு சகோதரியின் தலைமையிலான அரசு செயல்படுத்துகின்ற எண்ணற்ற திட்டங்களைச் செம்மையான முறையில் பயன்படுத்தி சிறந்த மாணவச் செல்வங்களை உருவாக்க வேண்டியது ஆசிரியப் பெருமக்களின் தலையாய கடமையாகும். மாணவ சமுதாயத்தின் சிறப்பான வாழ்விற்கு அல்லும் பகலும் உழைத்திடும் ஆசிரியர் பெருமக்களுக்கு எனது ஆசிரியர் தின நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன் என்று மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் கூறியுள்ளார்.

No comments: